search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழத்தோட்டம்"

    • தீயணைக்கும் படையினர் மீட்டு வனத்துறையினரிட ம் ஒப்படைத்தனர்
    • பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள அஞ்சுகிராமம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தீபன் (வயது 23). இவர் சுற்றுலா வேன் டிரைவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்திருந்தார். இவர் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட வந்தார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட சென்றார்.

    பூங்காவை பார்வையிட்டு விட்டு திரும்பி வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது வாகனத்துக்குள் கொடிய விஷப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அலறினார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி, நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    அந்த பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அவர்கள் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த விஷப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • தாலுக்கா அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் புதர் மண்டி கிடந்தது.
    • பழத் தோட்டம் மற்றும் பூந்தோட்டம் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    தாலுக்கா அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் புதர் மண்டி கிடந்தது. இதை தாலுகா அலுவலக அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி பயனளிக்கும் வகையிலும் பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையிலும் பழத் தோட்டம் மற்றும் பூந்தோட்டம் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக தாலுகா அலுவலக வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பூந்தோட்டம் அமைக்க 100-க்கும் மேற்பட்ட ரோஜா செடிகளை நட்டு வைத்தனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு மரக்கன்றுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான பணியை தாசில்தார் சுகுமார் தலைமையில் ஆர்.ஐ. மணி துணை தாசில்தார் கமருதீன் மற்றும் வி.ஏ.ஓ.க்கள், அலுவலக ஊழியர்கள் செய்துள்ளனர்.

    ×