என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்"
- திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற்றது
- மாநகரை சுத்தமாக வைக்கும் விதத்தில் அனைவரும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி உதவி ஆணையர் அறிவுரை
திருச்சி:
திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்ேறார்கள், கவுன்சிலர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 உதவி ஆணையர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மாநகரை சுத்தமாக வைக்கும் விதத்தில் அனைவரும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவு, மின்கழிவு என்பன அனைத்தையும் சாலைகளில் வீசாமல் குப்பைத் தொட்டியில் முறையாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்க முயற்சி செய்யவேண்டும். குப்பைகளை தெருக்கள் மற்றும் திறந்த வெளிகளில் வீசிச்சென்றால் ரூ.500 அபராதம் வழங்கப்படும்.
அதை பொது மக்கள் யாராவது தகவல் தெரிவித்தால் அதற்கு ரூ.100 பரிசாக வழங்கப்படும் என்று தற்போது மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆகவே பொது மக்கள் மாநகரை சுத்தமாக வைத்து கொள்ள தாங்களும் கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்