search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி புதிய கட்டிடம் திறப்பு"

    • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடந்தது.
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், நகர தி.மு.க செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் தமிழரசி, ஜெயராணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க நிதியுடன் விளாத்திகுளம் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி, கிராம மேம்பாட்டு திட்டம், மரங்கள் மக்கள் இயக்கம் மற்றும் ரம்யா தட்டச்சு பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்த கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், டாக்டர் அனிதா மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×