search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி திட்டம்"

    • மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டி வர வேண்டும்
    • கலெக்டர் பேச்சு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபிநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்கு மாண வர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஈடுபாடுடன் செயல்பட்டு இந்த பள்ளி மாநில அளவில் மிளிரும் பள்ளியாக உயர்த்த வேண்டும்.

    மாணவர்கள் ஒழுக்கத்து டன் இருக்க வேண்டும். தலைமுடியை சரியாக வெட்டிகொண்டு வர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். மாணவர்கள் இவ்வாறு ஒழுக்கமாக இருந்தால் தான் பள்ளி உயரும், நீங்களும் உயருவீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன்னதாக மாணவர்கள் பள்ளி தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி ரவி, ஜோதிலட்சுமி ராஜ்குமார், சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×