search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை காலம்"

    • பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    • 2 பேர் சாவு எதிரொலி

    நாகர்கோவில்:

    ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் இறந் ததை தொடர்ந்து, நீர்நி லைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக் டர் அரவிந்த் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப் பாட்டில் உள்ள குளங்களில் துறை தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வும், பெருவெள்ள காலங் களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரை களை சீரமைக்கும்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பருவமழையை யொட்டி அதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் மற்றும் மீட்பு பணிகளும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    மாத்தூர் தொட்டிபாலம் அருகே ஆற்றில் அடித்துசெல் லப்பட்ட இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் வேண்டும். (நீர்வள அமைப்பு) உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அப்ப குதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீச்சல் மற்றும் குளிக்கும் எல்லா இடங்களிலும் எச்சரிக்கை செய்திகள் அல் லது பலகைகள் வைக்க வேண்டும் என்பதை உறுதிப்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

    தற்போது மழை காலம் என்பதால் அணைகளின் நீர் மட்டத்திற்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. எனவே அனைத்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆறுகள், குளங்கள், தாழ் வான பகுதிகளில் குளிப்பது மற்றும் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×