என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பரிசுப்பொருட்கள் ஏலம்"
- மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர்.
- தமிழகத்திலேயே சேலத்தைச் சேர்ந்தவருக்கு தான் இந்த ஆண்டு ஏலம் மூலம் பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னதானப்பட்டி:
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சேலம் அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் கந்தசாமி (வயது 50) திருவள்ளுவர் சிலையையும், பட்டு, துண்டு, வேஷ்டிகளையும் ஏலத்தில் எடுத்துள்ளார்.
தமிழகத்திலேயே சேலத்தைச் சேர்ந்தவருக்கு தான் இந்த ஆண்டு ஏலம் மூலம் பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஏலத்தில் எடுத்த இந்தப் பொருட்களை தனியார் நிறுவனத்தில் இருந்து நேரடியாக அவர் இல்லத்திற்கு கொண்டு வந்து கொடுத்துச் சென்றுள்ளார்கள். இதனையொட்டி அவரை இல்லத்தில் நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் வாழ்த்துக்களையும், நன்றியையும்
தெரிவித்தார்.
மேலும் கொரோனா பெருந்தோற்று காலத்தில் பி.எம்.கேர்ஸ் மூலமாக உதவியும், தற்போது பெண் குழந்தைகளின் கல்விக்காக பங்காற்றியும் வரும் கார்த்திகேயனுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் நன்றியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்