search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசல் தடை"

    • ஒகேனக்கல்லுக்கு தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
    • பரிசல் இயக்க தடை காரணமாக வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளின் நீர் திறப்பு எதிரொலியால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறையால் நேற்று பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு சுமார் 9 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி கரையோர பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இணைவு பெறும் தொட்டல்லா ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தானது நேற்று முன்தினம் 11ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    ஒகேனக்கல்லுக்கு தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. அதனை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை இன்று 3-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பரிசல் இயக்க தடை காரணமாக வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இருப்பினும் வந்திருந்து சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியல் குளித்தும், தொங்கு பாலத்தின் மீது ஏறி அருவியின் அழகை கண்டு ரசித்தனர். காவிரி ஆற்றில் பரிசில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வந்திருந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மேலும் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், உணவருந்தும் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

    • கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    தருமபுரி:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் உடனடியாக பரிசல்களை கரைக்கு கொண்டு வந்தனர். பரிசல் இயக்க தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×