search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பம்புசெட்டுகள்"

    • பம்புசெட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
    • கலெக்டர் அரவிந்த் அறிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மைப் பொறியியல் துறை தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைதிறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் ( 40 சதவீதம் தமிழகஅரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம் ) 2021-2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் தவணையாக 2000 சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ரூ .43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும் . இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசனஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்புசெட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் இலவச மின்இணைப்பு கோரி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

      மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை நுண்ணீர்பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

    சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை , உதவி செயற்பொறியாளர், தொழிற்பேட்டை, கோணம் (8903569359) மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை , உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பனங்காலவிளை . அழகியமண்டபம் (9443450727) அலுவலகங்களை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×