search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி ஏற்றனர்"

    மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் திட்டக்குழு தலைவர் மெர்லியண்ட்தாஸ் பேச்சு

    நாகர்கோவில் : குமரி மாவட்ட திட்ட க்குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்ப ட்டனர். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அவர்க ளுக்கான பதவி ஏற்பு விழா மற்றும் முதல் கூட்டம் இன்று நடந்தது.

    திட்ட குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். மாவ ட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், திட்ட அதிகாரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட குழு உறுப்பினர்களாக நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, பரமேஸ்வரன், சிவகுமார், ராஜேஷ் பாபு, ஆதிலிங்க பெருமாள், மேரி ஜெனட் விஜிலா, விஜிலா, ஜாண் சிவன் ராபர்ட், லாரன்ஸ், ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பதவி ஏற்று க்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் பேசிய தாவது:- நாகர்கோவில் சவேரியார் ஆலயம் பகுதியில் ரோட்டில் கடந்த 50 ஆண்டுகளாக மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி வந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி சாலைகள் சேதம் அடைந்து வந்தது. ஒரு கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க ரூ.90 லட்சம் வரை செலவாகி வந்தது. 50 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைக்கு நான் மேயராக பதவி ஏற்ற பிறகு அதை தீர்க்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆணையர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

    அப்போது சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுற த்திற்கு பைப் லைன் அமைத்து விட்டால் தண்ணீர் தேங்காமல் இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரூ.3 லட்சம் செலவில் அந்த பைப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த பகுதியில் தண்ணீர் தே ங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. திட்டமிட்டு செய்ததின் காரணமாக பலன் கிடைத்துள்ளது. எனவே ஒரு பணியை செய்யும் போது அனைவரும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து திட்ட குழு தலைவர் மெர்லி யன்ட் தாஸ் கூறுகையில், திட்ட குழுவானது குமரி மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி வளர்ச்சிகாக மட்டும் அல்லாது ஒட்டுமொ த்த மாவட்டத்தின் வளர்ச்சி க்காக திட்டமிட வேண்டும். இன்று திட்டமிட கூடிய திட்டம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு பய ன்பாட்டுக்கு வரும்போது அது அனைவருக்கும் பயன் அளிக்க வேண்டும். எனவே புதிதாக தேர்ந்தெ டுக்கப்ப ட்ட திட்டக்குழு உறுப்பின ர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    ×