search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாயத்து தலைவி"

    • கிராம சபை கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என அழகு பாண்டியராஜா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.
    • போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு அழகு பாண்டியராஜா புகார் மனு அனுப்பினார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் அழகு பாண்டியராஜா (வயது 37). இவரது மனைவி மகாதேவி.

    இவர் களப்பாகுளம் பஞ்சாயத்து 12-வது வார்டு உறுப்பினராக உள்ளார். கடந்த நவம்பர் 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என அழகு பாண்டியராஜா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்தவர்கள் அழகு பாண்டிய ராஜாவை சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அழகுபாண்டியராஜா சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில் பஞ்சாயத்து தலைவி சிவசங்கரி தூண்டுதலின் பேரில் அவரது சகோதரர் சண்முகநாதன் மற்றும் வலங்கைபுலி, பசும்பொன், முருகன் ஆகியோர் சேர்ந்து தன்னை திட்டியதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு அவர் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதனை விசாரித்த ஆணையம் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு உத்தர விட்டது. அதன்பேரில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×