search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சை நிறம்"

    • தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது.
    • பச்சை நிறமாக காட்சியளித்த கடல் நீரை கண்ட மக்கள் அச்சத்துடன் கடலுக்கு அருகே செல்லாமல் இருந்து உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பொதுமக்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக கடற்கரை பகுதிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் மக்கள் புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவுக்கு சென்றனர். அப்போது அந்த பகுதி கடல் முழுவதும் பச்சை நிறமாக காட்சி அளித்துள்ளது. அதே நேரத்தில் அலையின் வேகமும் அதிகமாக இருந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் அச்சத்துடன் கடலுக்கு அருகே செல்லாமல் இருந்து உள்ளனர்.

    தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும் போது, கடலில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்களாலோ அல்லது பாசியாலோ இதுபோன்று ஏற்படலாம் என்று கூறினர்.

    ×