search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் தடை"

    • கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தை மாத பவுர்ணமி வருகிற 5-ந் தேதியும், பிரதோஷத்தை முன்னிட்டும் நாளை (3-ந்தேதி) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது, இரவில் கோவில் பகுதியில் தங்கக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது.

    சதுரகிரி மலைப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் நாளை மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

    ×