search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோயாளிகளுக்கு யோகா கலை மூலம் சில நோய்களுக்குதீர்வு"

    • மாணவிகளுக்கு பரிசு
    • ஸ்ரீநாராயணி செவிலியர் கல்லூரி சார்பில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி செவிலியர் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி நடந்தது.

    இதில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலக அலுவலர் ஜெயகணேஷ் தலைமையில் நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் பாலாஜி தொடங்கி வைத்தார்.

    அப்போது இயக்குனர் பாலாஜி பேசியதாவது:-

    யோகா கலை மனதிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் பெறுகிறது. மருத்துவ செவிலியர்கள் அனைவரும் யோகா கலையை கற்றுக் கொள்வது நல்லது. வரும் நோயாளிகளுக்கு யோகா கலை மூலம் சில நோய்களுக்குதீர்வு காண சொல்லிக் கொடுப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெற வழிவகுக்கும்.

    ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சியை அனைவரும் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    பின்னர்யோகா பயிற்சியில் ஈடுபட்ட செவிலிர்களுக்கு 75வது சுதந்திர தின விழா சிறப்பு மலர் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த நூல்களையும் யோகா பயிற்சி அவசியம் குறித்த கையேடு களையும் மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டது.

    முன்னதாக யோகா கலையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

    அதன் பின்னர் அணைக்கட்டு அருகே புலிமேடு என்ற கிராமத்தில், யோகா கலை மற்றும் 75 ஆவது சுதந்திரதின அமுத பெருவிழா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மருத்துவ துறை துணை இயக்குனர், பானுமதி துணை இயக்குநர் காசநோய் பிரிவு ஜெயஸ்ரீ, மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் மற்றும் பொதுமக்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.

    ×