search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டு வழங்குதல்"

    • விழுப்புரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவ- மாணவிகளுக்கு நோட்டுவழங்கி கொண்டாடப்பட்டது.
    • மறைந்த முதல்வர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை நினைவு கூறும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சார்பில் மாவ ட்டத் தலைவர் ஆர். டி. விசீனிவாச குமார் தலை மையில் விழுப்புரம் - புதுவை சாலையில் அமைந்து ள்ளகாந்தி சிலை க்கும்,ராஜீவ் காந்தி திரு வி காசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனி ப்புகள் வழங்கப்பட்டது.

    அதைதொடர்ந்து விழு ப்புரம் நடராஜா நடுநிலை பள்ளியில் சுமார் 2000 மாணவர், மாணவிகளுக்கு நோட்புக்,பேனா வழங்கும் நிக ழ்ச்சி நடைபெற்றது. வழங்கப்பட்டது. நிகழ்ச்சி க்குஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி , மாநிலச் செயலாளர் வக்கீல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அனை வரையும் நகரத் தலைவர்செல்வராஜ் வரவேற்று பேசினார் . விழாவில் சிறப்பு விரு ந்தினராகளாக மத்திய மாவட்டத் தலைவர் தொழிலதிபர் ஆர்.டி.வி. சீனிவாசகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் குலாம் மொய்தின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளுக்கு நோட்டு,புத்தகங்கள், எழுதுபொருள்கள் ஆகி யவற்றை வழங்கினார்கள்.

    இதில்மாநில பொதுக்கு ழு உறுப்பினர் சிவா, மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி, மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், பொ துச் செயலாளர்கள் சேகர், ராஜேஷ், சர்தார் கான்,ஐஎன்டியுசி மாநில இணை செயலாளர் காஜா மொய்தீன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் அலி,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பரிமளா, ராஜேஸ்வரி, விட்டோபாய், வசந்தா, கீதா, பாமினி, முன்னாள் விழுப்புரம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமணன்,வட்டார நிர்வாகிகள் புரு ஷோத்தமன், பழனிவேல், சிவக்குமார் இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் சட்டமன்ற தலைவர் பிரபாகரன், ஆர்.டி.ஐ தலைவர் பிரகாஷ், ஐஎன்டிசி செயலாளர் அய்யனார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சந்தானகிருஷ்ணன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம் கண்டா ச்சிபுரம் மேல் வாலை யில் அமைந்துள்ள பழனி வேல் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி மற்றும் ஐ.டி.ஐ சார்பில் காமராஜர் பிறந்த நாள் இப்பள்ளியின் தாளாளரும்,பழனிவேல் ஐடிஐ நிறுவன தலை வருமான பொறியாளர் ஜெய ராஜேந்திரன்த லைமை யில்நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சிறுவந்தாடு நிலக்கி ழாரும்,தாளாளரின் தந்தையுமான ஜெயராமன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட காமரா ஜரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கண்டா ச்சிபுரம் அரிமா சங்க சாஸ் சனத் தலைவர் டாக்டர் மூர்த்தி ,தலைவர் குரு, மாவட்ட தலைவர் குண சேகர் ,செயலாளர் சத்யரா ஜ்பள்ளி முதல்வர் வாசுகி மேலாளர் தஷ்ணாமூர்த்தி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் .மறைந்த முதல்வர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை நினைவு கூறும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    ×