search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை சிறுமி"

    • ஜூன் மாதம் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் காசநோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
    • ஜூலை மாதம் நல்லத்தாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன், தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள் நல்லத்தாய் என்பவர் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    எனது மகள் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை என கூறிய நிலையிலும், 10-ம் வகுப்பு தேர்வு எழுத தடுப்பூசி கட்டாயம் எனக்கூறி ஆசிரியர்கள் அவருக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். அதன்பின்னர் எனது மகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு தனியார் மருத்துவமனையில் நல்லத்தாய்க்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் குணமாகவில்லை. இதனால் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

    ஜூன் மாதம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் காசநோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர். ஜூலை மாதம் நல்லத்தாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சற்று உடல்நிலை தேறிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    சுயநினைவு இல்லாமல் இருக்கும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கடந்த 3 மாதங்களாக நெல்லை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து மகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே நல்லத்தாய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் முன்பரிசோதனை செய்யாமல் நல்லத்தாய்க்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×