என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு"
- முறைகேடாக ஏலம் விட்ட 50 பவுன் நகைகளை 2 மடங்காக வழங்க வேண்டும்.
- திருமங்கலம் தனியார் நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை
மதுரை திருநகரை சேர்ந்தவர் சியாமளா ரவி. இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:-
நான் கடந்த 2021-ம் ஆண்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறு வனத்தில் நகைகளை முறையே 54 பவுன், 24 பவுன் அடகு வைத்து பணம் பெற்றேன். அதனை தொடர்ந்து மேலும் 24 பவுனை அதே தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தேன்.
இந்த நிலையில் 1-வது அடமான கடனான 54 பவுனை உரிய அசல் தொகையுடன் கூடுத லாக ரூ.3 லட்சம் செலுத்தி நகைகளை திருப்பினேன். மேற்கண்ட மற்ற 2 நகை கடன்களை திருப்ப முயன்றபோது, அதற்கு அந்த தனியார் நிதி நிறுவனம் மழுப்பலாக பதில் அளித்தனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, மேற்படி 2, 3-வது அடமான கடனுக்கான மொத்தம் 48 பவுன் நகைகளை எவ்வித அறிவிப்புமின்றி முறை கேடாக ஏலமிட்டது தெரிய வந்தது.
எனவே ஏலமிட்ட நகை களையும், என்னிடம் இருந்து முதல் நகைக்கடனுக்கு கூடுதலாக வசூல் செய்த பணத்தையும் திருப்பி பெற்றுத்தர வேண்டும். மேலும் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு தனியார் நிதி நிறுவனம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ராஜேஷ்குமார் டிஜாங்கோ ஆஜராகி வாதா டினார். வழக்கு விசார ணையில் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு நிரூ பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரரின் சுமார் 50 பவுன் நகை களை முறை கேடாக ஏல மிடப்பட்டு உள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட நிதி நிறு வனம் அந்த நகைகளை 2 மடங்காக வாடிக்கையா ளருக்கு வழங்க வேண்டும்.
முதல் நகைக்கடன் பெயரில் பெற்ற கூடுதல் பணத்தில் 9 சதவீதம் வட்டியை கணக்கிட்டு மீத முள்ள தொகையை திருப்பிதர வேண்டும்.
மேலும் வாடிக்கையாளரின் மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் நிதி நிறுவனம் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு கூறப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்