search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகேசி அம்மன்"

    • இக்கோவிலில் நடைபெறும் தூக்க நேர்ச்சை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • தினமும் பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் புராதன சிறப்பு மிக்கதும், பழமை வாய்ந்தது மான இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரை திருக்கோவில் குலசேக ரத்திற்கு அருகில் இட்டக வேலி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

    சுமார் 700 வருடங்க ளுக்கு முன்பு தோன்றப் பட்ட இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடை பெறும் அம்மையிறக்கத் திருவிழாவின் போது குமரி மாவட்டத்தி லிருந்தும், கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் தூக்க நேர்ச்சை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இவ்வாண்டு திருவிழா வையொட்டி நாளை (22-ந்தேதி) காலை 7 மணிக்கு பொன்மனை அருகே கிழக்கம்பாகம் சந்திப்பில் கோவில் பூசாரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு சாவிதானம் நடைபெறுகிறது. பின்னர் 10.30 மணிக்கு விழா பறம்பு நோக்கி வெள்ளிப் பிள்ளை எழுந்தருளல் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, பக்தர்கள் புடை சூழ அம்மையிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு பூஜைகள், வழி பாடுகளுக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு அம்மன் விழா பறம்புக்கு எழுந்தருளல் நடைபெறு கிறது.

    தொடர்ந்து 31-ந்தேதி வரை நடைபெறும் இத்திரு விழாவில் 5- ம் திருவிழா நாளான 26-ந்தேதி மாலை 6 மணிக்கு 2007 திருவிளக்குப்பூஜை நடை பெறுகிறது. விழாவின் 7-ம் நாளான 28-ந்தேதி தூக்க நேர்ச்சை விழா நடைபெறுகிறது. முன்னதாக குத்தியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள் குடம், துலாபாரம், பிடிப்பணம், உருள் நேர்ச்சைகள் உள் ளிட்ட நேர்ச்சைகள் நடை பெறுகின்றன.

    9- ம் திருவிழா நாளான 30-ந்தேதி மாலையில் சிறப்பு வாய்ந்த கமுகு எழுந்தரு ளல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 10-ம் திருவிழா நாளான 31-ந்தேதி மாலை 4 மணிக்கு பொங்கல் வழி பாடு நடைபெறுகிறது. விழாவில், 2 - ம் திருவிழா நாள் முதல் நிறைவு நாள் வரை தினமும் பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இட்டகவேலி நீலகேசி அம்மா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×