search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி கலெக்டர் தகவல்"

    • முகக் கவசம் அணிந்து மாணவர்கள், ஆசிரியா்கள் பள்ளிக்கு வரவேண்டும்
    • பூங்கா ஊழியா்கள் அறிவுரை வழங்கி வருகின்றனா்.

     ஊட்டி,

    கோடை சீசன் நிறைவு பெற்ற நிலையிலும் தொடா்ந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

    தமிழகத்தில் ெகரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க ெதாடங்கியுள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.

    பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

    இதனைத் தொடா்ந்து ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளிடம் பூங்கா ஊழியா்கள் அறிவுரை வழங்கி வருகின்றனா்.

    அதுமட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முகக் கவசம் அணிந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி கலெக்டர் அம்ரித் வேண்டுகோள்
    • குழுக்களுக்கு ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

    ஊட்டி,

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 75-வது சுதந்திர பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் நீலகிரி மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம், அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய வாடிக்கையாளர்களுடன் தொடங்கும் நல்லுறவு, தொடரும் நல்லுறவு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் 60 பயனாளிகள் மற்றும்குழுக்களுக்கு ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    அரசின் திட்டங்கள்

    பொதுமக்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய, மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் தொழில் கடன், சுயஉதவிக்குழு கடன்கள் உதவிகள் குறித்தும், மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பிலும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் பல்வேறு விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காரட் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காகவும், பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் தனிநபர் கடன், வீட்டு கடனுதவிகள், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    கடனுதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வங்கியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு இடையே திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பெருவிழா நடந்தது.

    நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் அரசின் கடன் உதவி திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் கடனுதவி கேட்டு வங்கிகளுக்கு வரும்போது வங்கியாளர்கள் அவர்கள் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகளை சரியான முறையில் ெதரிவித்து கடனுதவிகள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் மக்களுக்கு வங்கிகள் மீதும், நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×