search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தை"

    • கருங்கல் அருகே உள்ள பாலூர் கோவில்விளையை சேர்ந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் கோவில்விளையை சேர்ந்தவர் உபால்டுராஜ் (வயது 52), தொழிலாளி.இவரது வீட்டின் முன் உள்ள 3 சென்ட் நிலத்தை இவரது அண்ணன் தெய்வசி காமணி இவருக்கு தருவதாக கூறியிருந்தாராம்.

    பின்னர் அதனை வேறொருவருக்கு விற்பனை செய்ததோடு இவரது வீட்டின் முன் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த உபால்டுராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். இதனைக்கண்டவர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனி ன்றி நேற்று உபால்டுராஜ் பலியானார். இதுகுறித்து அவரது மனைவி ஹேமலதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×