என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலத்தடி நீர்"
- மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.
- பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
எண்ணெய் கழிவு கலந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.
நிலத்தின் உள்பகுதியில் நீண்ட தூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இது தவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
- 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
- நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.
புதுடெல்லி:
மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகள் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்கண்ட கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமாக உயர்த்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சி முடிவுகள் நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.
மேலும் பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது என ஆய்வுக்கு தலைமை தாங்கிய சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் கி. வியோன் சியோ தெரிவித்துள்ளார். இதனை ஆய்வில் ஈடுபடாத ஜெட் பிரபல்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சுரேந்தரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இவ்வாறு நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதால் ஏற்பட்ட மாற்றங்களால் பருவங்கள் மாறும் அபாயம் இல்லை. அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில் துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை தொடர்பான காரணங்களில் நிலத்தடி நீரின் பகிர்வு உண்மையில் பூமி சுழற்சி சறுக்கலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளதாக விஞ்ஞானி சியோ கூறியுள்ளார். மேலும் மத்திய அட்சரேகையில் இருந்து தண்ணீரை மறு பகிர்வு செய்வது துருவ சறுக்கலை கணிசமாக பாதிக்கிறது.
பெரும்பாலான மறு பகிர்வு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்திய பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் மத்திய அட்சரேகைகளில் அமைந்துள்ளன. பூமியின் சுழற்சியை மாற்றுவதில் நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் இப்போது வரை அதன் சறுக்கல்களுக்கான நிலத்தடி நீரின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. இதுவே முதன் முறை என தெரிவித்துள் ளனர்.
ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க பல நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மீண்டும் மாற்ற இயலும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வில், 1995-ம் ஆண்டில் துருவ சறுக்கலின் திசை தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று 1995-2020 வரையிலான சராசரி சாய்வின் வேகம் 1981-95 காலகட்டத்தை ஒப்பிடும்போது 17 மடங்கு வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நீர் நிலைகளில் இருந்து 18 ட்ரில்லியன் டன் தண்ணீரை மாற்றாமல் பிரித்தெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
- நிலத்தடி நீரை பாதுகாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காளையார்கோவில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு ஊராட்சி யில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலக தண்ணீர் தினமான இன்று சிவகங்கை மாவட் டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதன்மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கு வதற்கான பயனாளி பட்டியல் தேர்வு செய்வ தற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும் என்பதை அடிப்படையாக கொண்டு, முதல்-அமைச்சர் தமிழ கத்தின் அனைத்துப்பகுதி களிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.
தண்ணீர் மேலாண் மைக்கு தமிழ கத்தின் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் சரஸ்வதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)தனபாலன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின.
மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி உள்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வீடுகளுக்குள் முடங்கினர். சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று மாலை வரை மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம், காங்கயம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு :- திருப்பூர் வடக்கு-16, அவினாசி-6, பல்லடம் -32, ஊத்துக்குளி-6, காங்கயம்-28, தாராபுரம்-43, மூலனூர்-34, குண்டடம்-25 திருமூர்த்தி அணை -27, அமராவதி அணை- 39, உடுமலை-38.20, மடத்துக்குளம் -76, திருப்பூர் கலெக்டரேட்-7, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம் -35, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -25, திருப்பூர் தெற்கு-15, கலெக்டர் முகாம் அலுவலகம் - 20.40,உப்பாறு அணை -75, நல்லதங்காள் ஓடை -34,வட்டமலைக்கரை ஓடை- 56.40. மாவட்டம் முழுவதும் மொத்தம் 638மி.மீ. மழை பெய்துள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
- ஓட்டப்பிடாரம் மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- குளம் நிரம்பியதால் இந்த பகுதி நிலத்தடி நீர் பெருகும்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பட்டி, ஐரவன்பட்டி, பரிவள்ளி கோட்டை ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.
இந்த மழை நீர் ஓடையின் வழியாக வந்து ஒட்டநத்தம் குளம் நிரம்பியது. ஒட்டநத்தம் குளத்தின் மறுகால் நீர் கொம்பாடி ஓடை வழியாக முரம்மன் குளத்திற்கு வந்து அந்த குளமும் நிரம்பி மறுகால் சென்றது. இக்குளம் நிரம்பியதால் இந்த பகுதி நிலத்தடி நீர் பெருகும். இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வழியும். இப்பகுதி கிணற்று பாசன விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மானாவாரி விவசாயிகள் மழைக்கு முன்பாக உளுந்து, பாசிப்பயறு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். தற்சமயம் பெய்த மழையால் பயிர்கள் நன்றாக முளைத்துள்ளன. இதனால் இப்பகுதி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
பல்லடம் :
தமிழ்நாடு நீர்வளத்துறை கோவை கோட்டம் சார்பில், ஜல் சக்தி அபியான் தேசிய நீரியல் திட்டம் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
நீரியல் திட்ட உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனியன், உதவி செயற்பொறியாளர்கள் கீதா, வனிதா, ஸ்ரீராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித சங்கிலியை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளிடம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வழிமுறைகள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
- இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும்.
- நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும்.
பேராவூரணி:
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கை வெளியீட்டு விழா பேராவூரணியில் நடைபெற்றது.
, தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தங்க. குமரவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மருது. குமார் வரவேற்றார். தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர் சின்னப்பத் தமிழர் கொள்கை அறிக்கையை வெளியிட கவிஞர் கான்முகமது பெற்றுக் கொண்டார். இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் கொள்கை விளக்க உரையாற்றினார்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும், அதேபோல் இந்த நகரங்களிலும் துணை தலை நகரம் அமைக்க வேண்டும். மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ள நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், அக்னிபாத் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாலசுந்தரம், ராஜமாணிக்கம், ஜெயராஜ், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், பழனிவேலு, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் ரவீந்திரன், அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆயர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புதிய நடைமுறையாக முன்பணம் செலுத்தி விட்டுதான் உரங்களை பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குறிப்பாக கிராம பகுதியில் விவசாய தேவைக்கு உரங்கள் பெறுவதில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறிருப்பதாவது
தமிழகத்தில் வேளாண்மை க்கு என்று தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டது. ஆனால் வேளாண் சார்ந்த பல்வேறு துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் உள்ளது. அதாவது உரம் சம்பந்தப்பட்டதற்கு வேளாண் துறையும், அதனை விற்பதற்கு வேறு துறையும் என ஒவ்வொன்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். உரம் வினியோகம் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர்கூ ட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ங்கள் உரங்களை விநியோகம் செய்துவிட்டு அதற்குப் பிறகு பணம் பெற்றுக் கொள்வர். ஆனால் தற்போது புதிய நடைமுறையாக முன்பணம் செலுத்தி விட்டுதான் உரங்களை பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நலிவடைந்த சில கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை சங்கங்களால் முன்பணம் செலுத்த முடிவதில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குறிப்பாக கிராமப் பகுதியில் விவசாயத் தேவைக்கு உரங்கள்பெறு வதில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.எனவே உடனடியாக தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை சங்கங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கி முன்பணம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உறவினியோகம் சீராக இருக்கும்.கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கரும்புக்கான நிலுவைத் தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது. குருங்குளம் சர்க்கரை ஆலைகள் மட்டும் ரூ.21 கோடி நிலுவைத் தொகை உள்ளது. தமிழக அளவில் ரூ.340 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை உள்ளது. அதனை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குவழங்கிட நடவடிக்கை எடுக்க வே ண்டும்.கூட்டுறவு சங்கங்களில் நடைபெறுகின்ற ஊழல் முறைகேடுகளை தடுக்க வேண்டும்இன்று மத்திய அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் 3 மாத காலத்துக்குள் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று ஜல்சக்தி துறை தெரிவித்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பை திரும்ப பெறவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அணைப்புதூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள நல்லாற்றில், வெள்ளம் ததும்பி நிற்கிறது.
- நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவிநாசி :
கோவை மாவட்ட எல்லையான அன்னூரில் உருவாகி அவிநாசியை கடந்து திருமுருகன்பூண்டி வழியாக, செல்லும் நல்லாறு திருப்பூரில் நொய்யல் ஆற்றுடன் இணைகிறது. அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள வீடு, ஓட்டல் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடையில் கலப்பதால் ஓடை மாசடைந்துள்ளது.
இருப்பினும், அணைப்புதூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள நல்லாற்றில், வெள்ளம் ததும்பி நிற்கிறது. மழை மறைவு பகுதியாக அவிநாசி இருந்தும், சில ஆண்டுகளாக பருவமழை பெய்து வருகிறது. நீர் நிலைகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.ஒரு காலத்தில் நல்லாற்று நீர், சுற்றியுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பாசன தேவையையும் பூர்த்தி செய்துள்ளது. எனவே நல்லாறு துவங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை சுத்தம் செய்து, தூர்வாரினால், நீர் வளம் பெருகுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்