நிலத்தடி நீர் செறிவூட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

தமிழ்நாடு நீர்வளத்துறை கோவை கோட்டம் சார்பில், ஜல் சக்தி அபியான் தேசிய நீரியல் திட்டம் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

நீரியல் திட்ட உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனியன், உதவி செயற்பொறியாளர்கள் கீதா, வனிதா, ஸ்ரீராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித சங்கிலியை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளிடம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வழிமுறைகள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com