search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நால்கே புயல்"

    • பிலிப்பைன்சை உலுக்கிய நால்கே புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 98 பேர் பலியாகி விட்டனர்.
    • பிலிப்பைன்ஸ் நாட்டை இந்த ஆண்டு 2-வது முறை புயல் தாக்கி உள்ளது. அங்கு அடிக்கடி நிலச்சரிவும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    மணிலா:

    தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 5 நாட்களாக நால்கே புயலால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன, வீடுகளும் இடிந்து சேதமானது.

    பிலிப்பைன்சின் மதியிண்டனாஸ் உள்ளிட்ட மாகாணங்களை புயல் புரட்டி போட்டு விட்டது. பல நகரங்கள் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது, ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை.

    அவர்கள் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தலைநகர் மணிலா உள்ளிட்ட பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது. இதில் பலர் இறந்து விட்டனர். குதியாஸ் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.

    பிலிப்பைன்சை உலுக்கிய நால்கே புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 98 பேர் பலியாகி விட்டனர். பங்கஸ் மோரா மாகாணத்தில் தான் அதிகபட்சமாக 53 பேர் இறந்து உள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 63 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. புயல் பாதித்த பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புயல் பாதித்த பகுதிகளை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாந்த் மார்கோஸ் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார்.

    பிலிப்பைன்ஸ் நாட்டை இந்த ஆண்டு 2-வது முறை புயல் தாக்கி உள்ளது. அங்கு அடிக்கடி நிலச்சரிவும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • நால்கே புயல் பிலிப்பைன்சின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது.
    • புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை நால்கே என்கிற சக்திவாய்ந்த புயல் சமீபத்தில் தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன.

    கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் உருண்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மலைப்பாங்கான சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன.

    புயல், கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 30க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன.
    • பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    மணிலா :

    தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன.

    இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது.

    மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் உருண்டன.

    புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

    புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மலைப்பாங்கான சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன.

    இதனிடையே புயல், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் இதுவரை 31 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

    ×