search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுப்புற கலைகள்"

    • நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி மையம் திறப்பு நடந்தது.
    • ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோடாங்கி கலை கூடத்தின் நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய திறப்பு விழா நடந்தது. அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு இயக்குனர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமை தாங்கினார். பயிற்சி கூடம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், 'நம் நாட்டில் சங்க காலம் தொட்டு கலைகள் செழித்து வளர்ந்துள்ளது. திருத்தங்கலில் சங்க கால மக்கள் கலைகளை வளர்த்தது குறித்த சான்றுகள் உள்ளது. கலைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத் திற்கு என்று தனித்துவமாக பல்வேறு கலைகள் உள்ளது,' என்றார்.

    இந்த கோடங்கி கலைக்கூடத்தில் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை குச்சி, 8 வகையான கரகம், மான் கொம்பு, சிலம்பம், பொய்க்கால் குதிரை, காவடி, தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கலை இலக்கிய மாணவர்களுடன் இணைந்து நாட்டுப்புற கலைகள் குறித்து ஆராய்ச்சி யும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார். 

    ×