search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் டவுன் ரெயில்"

    • நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப் பட்டு வருகிறது.
    • டவுன் ரெயில் நிலையத்தில் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நெல்லை யிலிருந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டவுன் ரெயில் நிலையத்தில் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பாசஞ்சர் ரெயில்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் செல்வதற்கு டவுன் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. தற்பொழுது ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டது.

    தற்பொழுது நுழைவு வாயிலில் மேல்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராட்சத கம்பிகள் அமைக்கப்பட்டு கூரை அமைக்கப்படுகிறது. நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் டவுன் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட் பாரங்கள் அமைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் 3-வது பிளாட்பா ரம் அமைப்ப தற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 1-வது பிளாட் பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பா ரத்திற்கு பொது மக்கள் செல்ல வசதியாக லிப்ட் வசதி அமைப்பதற்கு ஏற்கனவே டெண்டர் பிறப் பிக்கப்பட் டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே உள் ளது. கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ள னர். இது குறித்து ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் அங்கு பொதுமக்கள், பயணி களுக்கு தேவையான அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    ரெயில் நிலைய பகுதி களில் போதுமான தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. பொதுமக்கள் பஸ்கள் இல்லாமல் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் நலன்கருதி கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை வசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ள தாக இருக்கும் என்றார்.

    ×