search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன வாசிக்கும் கருவி"

    • பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டாக்ஸ், டெய்சி, இ-பப், பி.டி.எப்., எச்.டி.எம். ஆகியவற்றை எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டுநகல், யு.டி.ஐ.டி. ஸ்மார்ட் கார்டு நகல், கல்விபடிக்கும் சான்று நகல், பாஸ்போர்ட் புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.

    இந்த கருவியில் இன்டர்நெட் ரேடியோ, யு.எஸ்.பி. பென் டிரைவ் மற்றும் எஸ்.டி.கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு, வைபை தவிர செல்போன் ஹாட்ஸ்பாட்டுடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள், ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டாக்ஸ், டெய்சி, இ-பப், பி.டி.எப்., எச்.டி.எம். ஆகியவற்றை எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.

    மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டுநகல், யு.டி.ஐ.டி. ஸ்மார்ட் கார்டு நகல், கல்விபடிக்கும் சான்று நகல், பாஸ்போர்ட் புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெற விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    ×