என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நர்சிங் கல்லூரி மாணவி"
- பெற்றோரின் பாசப்போராட்டம் தோல்வி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,
இரணியல் :
இரணியல் அருகே வில்லுக்குறி சரல்விளை பகுதியில் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 36) பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சகாய அஸ்வினி (22). இவர் தலக்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் திடீரென வீட்டில் இருந்து மாயமானார்கள். அக்கம் பக்கம் தேடிய போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,
இந்த நிலையில் நேற்று இரவு சகாய அஸ்வினி, சாமிநாதனுடன் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் முன்னிலையில் ஆஜராகி, தான் சாமிநாதனை காதலித்து வந்ததாகவும் தற்போது களக்காடு அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் வாழ்ந்தால் சாமிநாதன் உடன் இணைந்து வாழ்வேன் என்று உறுதியாக கூறினார். அவரிடம் பெற்றோர் பல விதமான அறிவுரை கூறியும் பயனற்ற நிலையில் கண் கலங்கிய படி நின்றனர். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்