என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தோல் நோய் பாதிப்பு"
- கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
- மேலும் தோல் சம்பந்தமான நோய் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அதனை த்தொடர்ந்து புத்தாண்டு பிறப்பு என கடந்த ஒரு வாரமாக களைகட்டியது. வெப்பநிலை 5டிகிரி செல்சியசாக பதிவானதால் கடும் உறைபனி ஏற்பட்டது.
மேலும் புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் விடுமுறை முடிந்து நேற்று ஊர் திரும்பினர். பொது மக்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். கடும் குளிரை சமாளிக்க முடியாமல் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சிர மமடைந்து வருகின்றனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படு கிறது. கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்டுள்ளது.
உறைபனியை தாங்கமுடியாமல் பகலிலேயே தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் தோல் சம்பந்தமான நோய் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.
இதனால் ஆஸ்பத்திரி களுக்கு பொதுமக்கள் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதத்தில் குளிர் காலமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவு பனிப்பொழிவு ஏற்பட்டு ள்ளதால் அனைத்து தரப்பினரும் அவதி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்