search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் பாதுகாப்பு படை"

    • தொழில் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்தார்.
    • நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்

    நாகர்கோவில்  :

    ராஜாக்கமங்கலம் பண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஐவின்ராஜா (வயது 25). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்தார்.

    தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று ஐவின்ராஜா வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆசாரி பள்ளம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் மீது ஐவின்ராஜாவின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை உடல் பகுதியில் பலத்த காயும் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐவின்ராஜா இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். ஐவின்ராஜா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான ஐவின் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர். விடு முறையில் ஊருக்கு வந்த நேரத்தில் ஐவின்ராஜா விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தி னர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    ×