search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவி முத்தாரம்மன்"

    • கொடை விழா நேற்று தொடங்கி வருகிற 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • வருகிற 27-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புலவர்விளையில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை கொடை விழா நேற்று தொடங்கி வருகிற 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    விழாவையொட்டி கணபதி ஹோமம், தேவி முத்தாரம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம், மாலை பக்தர்கள் அம்மனுக்கு முளைப்பாரி வைத்தல், நாத ஸ்வர இன்னிசை கச்சேரி, தேவி முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை போன்றவை நடைபெற்றது.

    இன்று (24-ந்தேதி) காலை 6 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு அபிஷே கம், 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, சமயசொற்பொழிவு, உச்ச கால பூஜை, அன்னதானம், பக்தி பஜனை, வில்லிசை போன்றவை நடக்கிறது.

    விளையாட்டு போட்டிகள் வருகிற 27-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், 30-ந்தேதி மாலை 3 மணிக்கு புள்ளிக்கோலம், ரங்கோலி கோலப்போட்டி, 1-ந்தேதி காலை 8 மணிக்கு பால்குட பவனி, 2-ந்தேதி மாலை 5 மணிக்கு ஒழுகினசேரி ஆற்றில் இருந்து கோவில் நோக்கி அம்மன் யானை மீது பவனி வருதல், பெண்கள் மாவிளக்கு ஏற்றி கோவிலை சுற்றி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு அபிஷேக தீபாராதனை, 10 மணிக்கு வில்லிசை, மாலை 3 மணிக்கு அம்மன் நகர்வலம் வருதல், இரவு 8 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தங்க பூந்தொட்டிலில் திருத்தாலாட்டு, 9 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 5-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு மணிக்கு தேவி முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், 9 மணிக்கு சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை புலவர்விளை ஊர் தலைவர் செல்வராஜன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×