search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்ட விழா"

    • பக்தர்கள் பங்களிப்போடு, பல லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
    • பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த காளியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகே சீராம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவிலின் தேர் சிதிலமடைந்த தேரோட்டம் இல்லாமல் இருந்து வந்தது. பக்தர்களின் வேண்டுகோளை அடுத்து இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு, பல லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு செங்காளி அம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சீராம்பட்டி காளியம்மன் விழாவும் தொடங்கியது.

    காளியம்மன் கோவில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி கடந்த 22-ம் தேதி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால்குடம், மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மாலை 4 மணிக்கு 18 ஆண்டுகளுக்கு பின், காளியம்மன் தேரோட்ட விழா பம்பை, தாரை தப்பட்டை, வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் வெகுவிமர்சியாக தேரோட்டம் நடந்தது.

    இந்த தேரோட்டத்தில் சீராம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சவுளுப்பட்டி, கொண்டம்பட்டி, கார்த்தானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த காளியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், விழாக்குழு வினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

    • பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வர சாமி மலைக்கோவில் தேரோட்ட விழா, இன்று நடைபெற்றது..

    விழாவை யொட்டி, கடந்த 28-ந் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று வரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில், நாள்தோறும் இரவு சிறப்பு பூஜைகளும் மற்றும் சிம்ம வாகனம், மயில்வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்சவங்கள், புஷ்ப அலங்காரங்கள் நடைபெற்றது.நேற்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் நிகழ்ச்சியாக, இன்று காலை 10.50 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் , ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு ஆகியோர் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா " என்று பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர். மேலும், உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா,பல்வேறு துறை அரசு அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். இதில், ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள், மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், , மாநகராட்சி கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) இரவு தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெறுகிறது. மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ,விழாவையொட்டி ஒசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், சுட்டெரித்த வெயிலில் மயங்கி விழுந்து ஒருவரும் பலியாகினர்.
    • தேரோட்ட விழாவில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், சுட்டெரித்த வெயிலில் மயங்கி விழுந்து ஒருவரும் பலியாகினர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    வேலூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் விநாயகம்(வயது 60). இவர் தேரோட்டத்தை காண்பதற்காக மேல்மலையனூருக்கு வந்தார். தேரை வடம்பிடித்து இழுத்தபோது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய விநாயகம், கீழே விழுந்தார். இதை கவனிக்காத பக்தர்கள், அவரை மிதித்து சென்றனர். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் தேரோட்டத்தின்போது வெயில் சுட்டெரித்ததால் மேல்மலையனூர் அருகே உள்ள கோடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(52) என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவர்கள் 2 பேரது உடலையும் வளத்தி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×