என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேனியில் கனமழை"
- கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
- போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலும் சாரல்மழை பெய்தபடி இருந்தது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கூடலூர், உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. போடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அருவியில் சீரான குடிநீர் இருந்ததால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி சென்றனர்.
தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலும் சாரல்மழை பெய்தபடி இருந்தது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எதுவும் இல்லாததால் மாணவ-மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.
பெரியாறு 3.6, தேக்கடி 2.8, கூடலூர் 3.8, சண்முகாநதி 16, உத்தமபாளையம் 4.8, போடி 19.6, வைகை அணை 1.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 1, ஆண்டிபட்டி 13.2 மி.மீ மழையளவு பதிவானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்