search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மயம்"

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ரவிசாம் பேனர்ஜி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். இந்த நிலை யில் பணத்தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப் பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் ரூ.5 ஆயிரம் எடுத்த போது பணம் வரவில்லை. ஆனால் அவரது செல்போ னுக்கு பணம் எடுக்கப்பட்ட தாக குறுந்தகவல்கள் வந்துள்ளது.

    உடனே தான் சேமிப்புக் கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் 2 நாட்களில் அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப் பட்டு விடும் என்று கூறியுள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்க வில்லை.

    இதனால் ரவி சாம்பேனர்ஜி சம்பந்தப் பட்ட வங்கிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னரும், உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரவிசாம்பேனர்ஜி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மய மாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி நஷ்ட ஈடுடாக ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    ×