search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பெண்குழந்தைகள் தினம்"

    • பெண்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மிக ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.
    • குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

    திருப்பூர்:

    தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடத்தப்பட்டது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார், பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆணையர் நந்தினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்களை இரு கண்களாக பார்த்து கொள்ள வேண்டும். பெண்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மிக ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். பெண் கல்வி உயர்ந்தால் நாடு வளம்பெறும். சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும்.

    பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் தினந்தோறும் பேசவேண்டும். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் . குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் எனது செயல்பாடுகளால் எந்த குழந்தையும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன் என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவடி பண்ணை அரசு பள்ளியில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ஆசிரியர் கிங்ஸ்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார். தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சித்தி ரம்ஜான், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி அனிற்றா ரூத் மங்களசெல்வி, ஆழ்வார் திருநகரி காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் ஆகியோர் பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக பள்ளி மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், கொடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சுனந்தா நன்றி கூறினார்.

    ×