search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருநாய்கள் தொல்லை"

    • செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
    • குழந்தைகளை தனியே அனுப்ப முடிவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனையும் புகார் தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம், செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

    மேலும் அங்குள்ள இறைச்சி கடைகளில் வீசப்படும் மாமிசங்களை தின்றுவிட்டு தெருவில் சண்டையிடுகின்றன. அத்துடன் வீடுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை இழுத்துச் செல்வதாகவும், தனியே நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதாகவும்,

    மேலும் இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குரைப்பதால் சரியாக தூங்க முடிவதில்லை என்றும், குழந்தைகளை தனியே அனுப்ப முடிவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனையும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களை பரிதவிக்க விடும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்குதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்டமனூர் கிராமத்தில் தெரு நாய் ஒன்று வெறிபிடித்து குழந்தைகள் உட்பட 19 பேரை கடித்தது.
    • தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கண்டமனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. பகல் நேரங்களில் நாய்கள் தேனி-வருசநாடு சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

    மேலும் நாய்கள் அடிக்கடி சாலையை கடப்பதால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டமனூர் கிராமத்தில் தெரு நாய் ஒன்று வெறிபிடித்து குழந்தைகள் உட்பட 19 பேரை கடித்தது. இதே போல கடந்த ஆண்டும் வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.

    கண்டமனூர் கிராமத்தில் நாய்களுக்கு வெறி பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×