search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணைவேந்தர் குர்மீத்சிங் பேச்சு"

    • காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    சின்னாளப்பட்டி:

    காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை சார்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு பாராட்டு விழா, பாரதி ஆய்வு நூலகம் திறப்பு விழா, மகாகவி பாரதியாரின் 101வது நிைனவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் இணையவழியில் கலந்து கொண்ட பல்கலைக்கழ கத்தின் பொறுப்பு துணை வேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மிக குறைந்த வயதில் மரணமடைந்து நீண்ட காலம் மக்கள் மனதில் பாரதியார் வாழ்ந்து வரு கிறார். அவரது கருத்துக்கள் தேச முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியது. அதனை தற்கால இளைஞர்கள் கண்டிப்பாக அறிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும்.

    அவரது கருத்துக்களை இளைஞர்களிடம் பதியச் செல்வது ஒவ்வொரு பேராசிரியர்களின் கடமை யாகும். மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார்.

    புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்துறை இணை பேரா சிரியர் ரவிக்குமார் பாரதி ஆய்வு நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றி னார். பாரதியார் ஆசிரியர், குரு ஆகிய நிலைகளின் தன்னை கருத்திக் கொண்டு மக்களுக்கு பல்வேறு சமுதாய சீர் திருத்த கருத்துக்களை தெரிவித்தார். அறிவியல் கருத்துக்களை தமிழ் கவிதையில் விரிவாக, நுணுக்கமாக பாடிய கவிஞர் பாரதிக்கு முன்னாலும் இல்லை. பின்னாலும் இல்லை.

    பிற மொழிகளில் கூட இத்தகைய முன்னு தாரணமான கவிஞரை காண முடியாது. பாரதியார் இலக்கியம், அரசியல் என்ற 2 தலங்களிலும் சிறப்பாக செயல்பட்டார். அவர் இலக்கிய தலத்தில் மட்டும் செயல்பட்டிருந்தால் இன்னும் பல அரிய அற்புதங்களை படைத்தி ருப்பார். பாரதியார் கவிதைகள் காலம் கடந்து புதிய வாசிப்புக்கு உரியதாக விளங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.

    அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சாமுவேல் சதானந்தா, பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் அலிபாபா, சென்னை கிறிஸ்துவ கல்லூரி தமிழ்துறை தலை வர் பாரதி புத்திரன், எழு த்தாளர் வேணு கோபால், பேராசிரியர்கள் ஆனந்த குமார் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×