search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண நிச்சயதார்த்த விழா"

    • திருமண நிச்சயதார்த்தவிழா அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருந்தன.
    • விழாவில் 3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான மலேசியாவை சேர்ந்த தினோஷாலிக்கும் சமீபத்தில் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.

    இந்த திருமண நிச்சயதார்த்தவிழா அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருந்தன. நிச்சயாதார்த்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் அருமுளை கிராமத்தில் இருந்து 15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக சென்று திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தினர்.

    இந்த விழாவில் 3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பிரமாண்ட முறையில் நடந்த விழா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    ×