search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் செயதிகள்"

    ஊர்வலத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி நிர்வாகம், செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

    பல்லடத்தில்முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் புகையிலை ஒழிப்பு குறித்து கோசங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் சென்றனர். மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ×