என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமிங்கலங்கள்"
- ராட்சத சுறாக்கள் கடற்கரையில் உலா வந்த நிலையில் தற்போது ராட்சத திமிங்கலங்களும் வருகை தந்துள்ளது.
- மீன்பிடி வலைகளையும் வாயில் கடித்து திமிங்கலங்கள் சேதப்படுத்தி விடுகின்றன.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதி மீனவர்கள் தினமும் 40 படகில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் சில தினங்களாக கரைப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடலில் ராட்சத திமிங்கலங்கள் ஆழ்கடல் பகுதியில் உணவுக்காக சிறிய வகை மீன்கள் கிடைக்காததால் இங்கு வந்து சிறிய மீன்களை பிடித்து தின்று பசியாறுகின்றன. இந்த திமிங்கலங்கள் கட்டுமரம் மற்றும் பைபர் படகை கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை ஆகும். அதேபோல் அவற்றிடம் மனிதர்கள் சிக்கினால் கடித்து காயப்படுத்தி, கொமோடா டிராகன், முதலை, மலைப்பாம்பு போல் விழுங்கி விடும்.
சில நாட்களாக சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது 10 அடி முதல் 20 அடி நீளமுள்ள திமிங்கலங்கள் கரைப்பகுதியில் படகுகளின் அருகில் வந்து உரசிவிட்டு செல்வதால் எங்கு படகுகளை கவிழ்த்து, தங்களை கடித்து காயப்படுத்தி விழுங்கி விடுமோ என்ற உயிர் பயத்தில் தினம், தினம் ஒரு வித பயத்துடனேயே கடலுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் மீன்பிடி வலைகளையும் வாயில் கடித்து திமிங்கலங்கள் சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் கடலில் ஏற்பட்டுள்ள தட்பவெப்ப சீதோஷ்ன நிலை காரணமாக ஆழ்கடலில் உள்ள திமிங்கலங்கள் இரை தேடி கரைப்பகுதியை நோக்கி வருவதாகவும் சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் கரைப்பகுதியில் திமிங்கலங்கள் உலாவுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே ராட்சத சுறாக்கள் கடற்கரையில் உலா வந்த நிலையில் தற்போது ராட்சத திமிங்கலங்களும் வருகை தந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்