search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து கால்பந்து வீரர்கள்"

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட கால்பந்தாட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் அடுத்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் வீடியோவை தாய்லாந்து அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் நோட், ‘நான் நன்கு உடல் நலம் தேறி வருகிறேன் என்னை மீட்ட மீட்புக் குழுவினருக்கு நன்றி’ என தெரிவித்திருந்ததும் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில், சிறுவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் அடுத்த வாரம் வியாழன் அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். 
    சிறுவர்கள் சிக்கித்தவித்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாகவும், மீட்பு குழுவின் தைரியமான மீட்பு பணிகளை திரைப்படமாகவும் எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், உலகின் கவனத்தை ஈர்த்த தாம் லுவாங் குகை மக்கள் பார்வையிடும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது என சிறுவர்களை மீட்ட மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்தார்.

    மீட்பு பணியின்போது பயன்படுத்தப்பட்ட பல நவீன கருவிகள், பிரத்யேக ஆடைகள் போன்றவை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    மேலும், சிறுவர்கள் குகையில் சிக்கிக்கொண்டது முதல் பத்திரமாக மீட்கப்பட்டது வரையிலான திரில் தருணங்களை திரைப்படமாக எடுக்க உள்ளதாக பியூர் ப்ளிக்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாறும் பட்சத்தில் தாய்லாந்து நாட்டின் சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
    குகைக்குள் சிறுவர்களுடன் 9 நாட்களாக சிக்கியிருந்த பயிற்சியாளர் பௌத்த மத துறவியாக இருந்தவர், அந்த அனுபவம் தான் சிறுவர்களை பீதியடையாமல் பார்த்துக்கொள்ள உதவியது என இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.

    இந்நிலையில், கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குகைக்குள் சிறுவர்களுடன் சிக்கியிருந்த பயிற்சியாளர் பௌத்த மத துறவியாக இருந்தவர், அந்த அனுபவம் தான் சிறுவர்களை பீதியடையாமல் பார்த்துக்கொள்ள உதவியது என இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து தூதர் அபிரட் சுகோந்தபிரோம், ‘குகையில் சிறுவர்கள் சிக்கிக்கொண்ட போது அவர்களை மீட்கவும், அவர்களின் நலனை பற்றி விசாரித்தும் பல இந்தியர்கள் தாய்லாந்து தூதரகத்தை தொடர்பு கொண்டனர்.

    குகையில் சிக்கிக்கொண்ட குழந்தைகளின் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் இந்தியர்களுக்கு நன்றி. உங்கள் அன்பை என்றும் மறக்க முடியாது. தற்போது குகைக்குள் இருக்கும் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகிறார்கள், மீண்டும் கனமழை பொழிவதற்குள் மாணவர்களை மீட்க வேண்டும் என கடும் முயற்சி எடுத்தோம் அதன் பலனாக இன்று குகைக்குள் இருந்த அனைவரும் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.



    குழந்தைகளுடன் சிக்கியிருந்த பயிற்சியாளர், கால்பந்தாட்ட பயிற்சியாளராக ஆவதற்கு முன்னதாக பௌத்த மத துறவியாக இருந்தார். சிக்கலான சூழ்நிலையை கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் மாணவர்களை தியானம் செய்ய பயிற்சிஅளித்துள்ளார். இதனால் பீதியடையாமல் மாணவர்கள் தைரியத்துடன் இருந்துள்ளனர்.

    மேலும், நிச்சயம் நமக்கு உதவி கிடைக்கும் என அவர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்து பாதுகாத்துள்ளார். முதன்முறையாக குகைக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்புக்குழுவினர் சந்தித்த போது மாணவர்கள் அனைவரும் சாதாரணமாக எந்த பீதியும் இல்லாமல் அமைதியாக இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்’ என்றார்.
    ×