search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியர். சஸ்பெண்டு"

    • சிறுமியின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர்.
    • சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் மாதம் 22-ந் தேதி வகுப்பறையில் இருந்தபோது தலைமை ஆசிரியர் திருமுருகவேள் (57), பாடம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர் வைத்திருந்த மூங்கில் குச்சியை மாணவியை நோக்கி வீசினார்.

    அப்போது அருகில் இருந்த மற்றொரு மாணவியின் இடது கண் மீது அந்த குச்சி விழுந்தது. இதில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பார்வை கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழும் வழங்கினர்.

    இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 24-ந் தேதி தலைவாசல் போலீசார் திருமுருகவேள் மீது வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவியின் மருத்துவ அறிக்கை பெறப்பட்டு, அரசு சார்பில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும், அரசின் அறிவிப்புபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    ×