search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைநகர்"

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • குமரி மாவட்ட மக்கள்,தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ரெயில் சேவை கிடைக்கும்

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் துணைத் தலை வர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயி ரக்க ணக்கான மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்கின்ற னர். அவர்களுக்கு வசதி யாக கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர், உள்ளிட்ட சில ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட, பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.

    அதிலும் குருவாயூர், அனந்தபுரி ரெயில்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படுவதால் அங்கேயே முன்பதிவு இரு க்கைகள் அதிக அளவில் நிரம்பி விடுவதும் தொடர் கதையாகி வருகின்றது.

    குமரி மாவட்டம் படித்த வர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் என்பதால் பலரும் சென்னையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறை யும் சொந்த ஊர் வந்து, சென்னை திரும்ப ரெயிலில் டிக்கெட் கிடை ப்பதே பெரும் சிரமமாக உள்ளது.

    இதனால் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயிலை தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதே குமரி மக்களின் கோரி க்கையாகும்.

    அப்படி செய்வதன் மூலம் குமரி மாவட்ட மக்கள்,தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ரெயில் சேவை கிடைக்கும். குமரி மக்களின் சிரமமும் பெரும் அளவில் தீர்க்கப்படும்.

    தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையால், நெல்லையில் இருந்து சென்னைக்கான பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து 7 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்து ள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை தமிழகத்தின் தென் கடைக்கோடி மாவட்ட மான கன்னியா குமரி வரை நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×