search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலைகள்"

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது
    • ஆண்டிபட்டி அருகே பெண் உள்பட 2 தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

    ஆண்டிபட்டி :

    ஆண்டிபட்டி அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் பாலையா (வயது60). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலையா உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி அருகே தி.சுப்புலாபுரத்ைத சேர்ந்த–வர் சந்தனமுனியாண்டி மகள் சுபாஷினி (22). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணமாகாததால் மனமுடைந்த சுபாஷினி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (65). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்ப–ட்டது. பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ெதன்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×