search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருவைகுளம்"

    • 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்தினால் தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,
    • மறுகால்நீர் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி அனல் மின் நிலைய அதிகாரிக்கு, கருமேனி ஆறு கழிமுக பகுதி விவசாயிகள் நல கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் அருகேயுள்ள எல்லப்ப நாயக்கன் குளத்தின் மறுகாலில் இருந்து வெளியேறும் உபரிநீர், அனல்மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க கால்வாய் கரையில் மணல் ஒப்பந்தகாரர்களால் சுமார் ½ பர்லாங் தூரம் 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்திலும், அனல் மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க உபரிநீர் கால்வாய் கரை 6 கி.மீ தூரத்திற்கு மிகவும் சேதமடைந்திருப்பாதாலும் குலசை தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்து,

    இதன்விளைவாக உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயத்தோட்டங்கள் மற்றும் பொது மக்கள்ள்குடிநீர் ஆகியன பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. இந்தாண்டு மணிமுத்தாறு, பாபநாச மலைகளில் சரியான மழையில்லை. ஆகையினால் பாபநாச அணைநீர் மட்டம் 97 அடிதான் நிரம்பியிருக்கிறது.ஏல்லப்பநாயக்கன் குளத்து மறுகால்நீர் எளிதில் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது

    எனவே எல்லப்ப நாயக்கன் குளம் மறுகா லிருந்து குலசை தருவைகுளம் வரை உபரிநீர் கால்வாயின் அனல்மின்நிலைய மதிற்சுவர் எதிர் கரையை 8 கி.மீ தூரத்திற்கு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சரிசெயய்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளம் புனித மிக்கேல் ஆங்கில பள்ளியில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளையும், மன்ற செயலாளர் செல்வசேகர் மெடல்களையும், மன்ற பொருளாளர் தேவதிரவியம் சான்றிதழையும் வழங்கினர்.

    விழாவில் மன்ற துணை செயலாளர் நீக்குலாஸ், துணை தலைவர் வில்சன் மற்றும் ராஜன், பேட்ரிக், பாக்கியம், ஆலோசனை மரியான், ராஜேந்திரன் மற்றும் காமராஜர் நற்பணிமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், லாரன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×