search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக எம்.பி.க்கள்"

    • தமிழக எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
    • டோல்கேட் பணியாளர்கள் தொடர் போராட்டம்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம்,

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் , மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி, ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் 56 -பேரை நிரந்தர பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த நிர்வாகத்தைக்கண்டித்து தொழிலாளர்கள் நேற்று 3- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.பிரபாகரன், ஊராட்சி குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் தொழிலாளர்களோடு தரையில் அமர்ந்து தொழிலாளர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும் போது,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 13- ஆண்டுகளாக இங்கு பணி புரிந்து வந்த 56 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த அலுவலகம் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சரு டன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக எம்.பி.க்கள் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    அப்போது பெரம்பலூர் கோட்டாட்சியர் ச.நிறைமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இரா. கிட்டு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணை செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் தி.மதியழகன், வீ.ஜெகதீசன், எஸ்.நல்வத்தம்பி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர்உசேன், துணை தலைவர் எ.ரசூல்அகமது, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், திருமாந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பெரு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×