என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனி தேர்வர்கள்"
- ஆகஸ்டு 2018 வரை எஸ்.சி.வி. டி. சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலோ அல்லது 04652-264463, 9443579558 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும். அகில இந்திய தொழிற்தேர் வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. முதல் 3 வகைகளில் தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள். திறன்மிகு தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள். ஆகஸ்டு 2018 வரை எஸ்.சி.வி. டி. சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 4-வது வகையில் பிற விண்ணப்பதாரர்க ளுக்கு 18.9.2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பத்தாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகு தியை பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு முதனிலைத்தேர்வுகள் கருத்தியல் பாட தேர்வு 10.10.2023 மற்றும் செய்முறை தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள அர சினர் தொழிற்ப யிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் சுலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறு பவர்கள் ஜூலை 2024-ல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு ஆகியவற்றை
www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதி விறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான கட்ட ணத்தை (ரூ.200) karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியா கவோ அல்லது தமிழக அர சின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ இ-செல்லான் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் இ-செல் லாள், கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றுடன் 19-த் தேதிக்குள் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை கோணத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத் திலோ அல்லது 04652-264463, 9443579558 என்ற தொலை பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்