என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தந்தை மீது தாக்குதல்"
- தந்ைதயை கும்பல் தாக்கிய நிலையில் பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் விண்ட ர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகர் என்கிற குட்டியப்பா (வயது 43). இவரது மகன் ஸ்ரீநாத் (16). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
தந்தை மீது தாக்குதல்
இந்த நிலையில் ஸ்ரீநாத் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் பழகி வந்துள்ளார். பகல் நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுடன் பொழுதை கழித்து வந்தார்.
இதனைப் பார்த்த தனசேகர், தனது மகன் ஸ்ரீநாத்தை கண்டித்து, வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அப்போது ஸ்ரீநாத் உடன் இருந்த இளைஞர்கள் தகராறு செய்தனர்.
தனசேகரை பிளேடால் ஆங்காங்கே வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தனசேகர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு. சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஸ்ரீநாத் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கி னார்.
இதனை பார்த்த தனசேகரன் மகன் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து அந்த பகுதி மக்கள் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விண்டர்பேட்டை பகுதியில் கஞ்சா கும்பல் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்