search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தட்சணமாற நாடார் சங்க கல்லூரி"

    • விழாவுக்கு கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் டி. சாந்தி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா தொடக்க உரையாற்றினார். முதல்வர் து. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில் சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை தலைவர் எம். மனோகர் நன்றி கூறினார்.

    • விழாவுக்கு கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார்.
    • சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 52-வது விளையாட்டு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் பேசினார். முதல்வர் ராஜன் வரவேற்றார். கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் ஜே.ஜெய்சன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் இயக்குனர்கள், கல்லூரிக்குழு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காமராஜ், ரகுநாதன், லிங்க செல்வன், கோல்டன் செல்வராஜ், பண்ணை செல்வகுமார், நவ்வலடி பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை பேராசியர் மரிய கிரிஸ்டின் நிர்மலா நன்றி கூறினார்.

    ×