search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க செயின் திருட்டு"

    • அடுத்தடுத்து 2 இடத்தில் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலல் பூஜை செய்யும் பூசாரி, நேற்று மாலை கோவிலை பூட்டிவிட்டு சாவியுடன் வீட்டுக்கு சென்றார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பூசாரி கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவில் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் பூசாரி, நிர்வாகிகளுடன் கோவில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கலி மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.

    இதேபோல் அதே கிராமத்தில் உள்ள கருமாத்தம்மன் கோவிலின் பூட்டும் உடைத்து,1/4 பவுன் தங்க நமை மற்றும் பணம் உள்ளிட்டவைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    கிராம மக்கள் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×