search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் பதட்டம்"

    • செஞ்சியில் இருந்து கார் ஒன்று சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
    • காரில் திடீரென புகை வந்ததால் அருகில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் இருந்து கார் ஒன்று சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. திண்டிவனம் அருகே வரும்போது கார் என்ஜினில் திடீரென புகை வந்தது. இதனை சற்றும் எதிர்பாராத கார் டிரைவர் புலிகேசி அதிர்ச்சியடைந்து காரை உடனே நிறுத்தினார். அதன்பிறகு காரை பழுது பார்த்து ஓட்டிச் சென்றார். போக்குவரத்து நிறைந்த சாலையில் காரில் திடீரென புகை வந்ததால் அருகில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காரில் வந்த சென்னையை சேர்ந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் இந்த பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×