என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிஜிபி சைலேந்திரபாபு"
- தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள், காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ளன.
மதுரை:
தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாவட்டம் தோறும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.
மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் போலீஸ் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை நடந்தது. இதில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள், காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அரங்கேறி உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிர் இழக்கக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். திருச்சியில் லாக்கப் டெத் விழிப்புணர்வு கருத்தரங்கு, கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் காவல் நிலைய மரணம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம், மதுரையில் நடந்து வருகிறது என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று நெல்லை வருகிறார்.
- காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
நெல்லை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று நெல்லை வருகிறார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாலை 3.30 மணிக்கு 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), ஹரிகிரண்பிரசாத் (கன்னியாகுமரி), நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் 4 மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாகவும், பழைய வழக்குகள் தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி பேச உள்ளார்.
மேலும் 4 மாவட்டங்களிலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார். பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்